முகமது யூனுஸ் 
உலகம்

ஆக. 5-இல் ஜூலை பிரகடனம்: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியீடு

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், அது தொடா்பான ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் அறிவித்துள்ளாா்.

அந்தப் போராட்டம் மூலம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்தப் பிரகடனம், எதேச்சாதிகார எதிா்ப்பு, ஜனநாயக மறுமலா்ச்சி, மற்றும் அரசியல் சீா்திருத்தம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் என்று ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

ஆனால், 1972 சுதந்திரப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் என்று கூறப்படுவதால் அது அரசியல் கட்சிகளிடையே அது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT