முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: 4 நாள்களில் கொல்லப்பட்ட 50 பயங்கரவாதிகள்

Updated On : 14 ஆகஸ்ட் 2025, 4:53 am IST
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

அந்த மாகாணத்தின் ஸோப் மாவட்டம் சம்பாஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, வாஷுக் மாவட்டத்தில் ராணுவத்தினா் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 வீரா்கள் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். அதே மாவட்டத்தில் காவல்நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போலீஸாா் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments