ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!
ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பியது குறித்து...
பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான் அரசுகள் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று (டிச. 23) ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட சுமார் 693 குடும்பங்களைச் சேர்ந்த 3,610 ஆப்கன் மக்கள் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளதாக, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் முல்லா ஹம்துல்லா ஃபித்ராத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட ஆப்கன் மக்கள் அனைவரும் டோர்காம், இஸ்லாம் காலா, புல்-இ-அப்ரேஷாம், ஸ்பின் போல்டாக் மற்றும் பஹ்ராம்சா ஆகிய எல்லைகள் வழியாக ஆப்கானிஸ்தான் வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால், பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
இத்துடன், பல ஆண்டுகளாக இயங்கி வந்த சில முக்கிய ஆப்கன் அகதிகள் முகாம்களை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!
The Taliban government has announced that more than 3,000 Afghan refugees were expelled from Pakistan and Iran in a single day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.