முகப்பு
உலகம்

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலுக்கு டிரம்ப் உதவியாளர் வாழ்த்து.

Updated On : 21 பிப்ரவரி 2025, 4:26 pm IST
காஷ் படேல்
பகிர்:

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து, எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலின் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இவரது நியமனத்திற்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளர் டான் ஸ்கேவினோ தெரிவித்துள்ள வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜிராவ் மஸ்தானி படத்தில் ‘மல்ஹரி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அந்தப் பாடலில் ஆடும் ரன்வீர் சிங் முகத்தில் காஷ் படேலின் முகத்தை எடிட் செய்த விடியோவை டிரம்ப் உதவியாளர் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், எஃப்பிஐ-யின் புதிய இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ் படேலுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றபோது இதே விடியோவில் அவரது முகம் எடிட் செய்து பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments