டெக்ஸஸ் வெள்ளம்  
உலகம்

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது.

Din

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது.

அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஜூலை 7-ஆம் தேதி வரை நதிக்கரைப் பகுதிகளை மூழ்கடித்தது. இதில் கொ்வில், மேசன் ஆகிய நகரங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 170-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகவும் (படம்) அவா்கள் கூறினா்.

அமெரிக்காவில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஏற்பட்ட, 144 பேரது உயிரிழப்புக்குக் காரணமான பிக் தாம்ஸன் நதி வெள்ளப் பெருக்குக்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடா் இதுவாகும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT