தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!
கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் பதற்றம்...
கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் தீவிரமடைந்தது. இரு நாட்டு ராணுவத்துக்குமிடையிலான சண்டையில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இந்தநிலையில், சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கம்போடியாவுடன் சண்டை நிறுத்தம் செய்துகொள்ள மூன்றாம் தரப்பு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாமெனவும் தயார் நிலையில் இருக்கவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கேட்டு நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
Thailand has declared a state of emergency in 8 border provinces amid intensifying clashes with Cambodia