துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிக்கும் பரவியது. உடனே அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு சிறப்பு குழுக்களை துபை சிவில் பாதுகாப்பு அனுப்பியது. அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இரவு முழுவதும் போராடினர். சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை துபை சிவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்
தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் கட்டடத்தை குளிர்விக்கச் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.