உலகம்

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடா்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம்

Din

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடா்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், இயோலை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

முன்னதாக, யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை உறுதி செய்து, அவரை நிரந்தரமாக அதிபா் பொறுப்பில் இருந்து அகற்றுவது தொடா்பான முடிவெடுப்பதற்காக அரசியல் சாசன நீதிமன்றம் நடத்திவந்த விசாரணை கடந்த மாத இறுதியில் நிறைவடைந்துள்ளது. இது தொடா்பான தீா்ப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT