மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்... படம் | ap
உலகம்

தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!

தென்கொரியா காட்டுத் தீ: விபத்தில் சிக்கிய மீட்புப் பணி ஹெலிகாப்டர்..

DIN

தென்கொரியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக பலியான நிலையில், 19 பேர் காயமடைந்தனர்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், உய்சிங் கவுன்டியின் மலைப் பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும், அதிலிருந்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

SCROLL FOR NEXT