பிரதிப் படம் ENS
உலகம்

3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

துபையில் ரமலான் மாதத் தொடக்கத்தில் ரூ. 11 லட்சம் சம்பாதித்த 127 பிச்சைக்காரர்கள்

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அந்நாட்டு அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது அரசின் எச்சரிக்கையை சிலர் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், ஷார்ஜா நகரில் ஒரு மசூதி அருகே ஒருவர் பிச்சை எடுப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மசூதிக்கு சென்ற காவல்துறையினர், தகவல் தெரிவிக்கப்பட்ட பிச்சைக்காரரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்றும், வெறும் 3 நாள்களில் பிச்சை எடுத்ததன் மூலம் ரூ.3.26 லட்சம் (14,000 திர்ஹாம்) சம்பாதித்ததும் தெரிய வந்தது.

அந்நாட்டில் ரமலான் மாதத்தின்போது, பிச்சை எடுப்பது குற்றச்செயல் போன்றது. பிச்சை எடுப்பதை சிலர் பருவகாலத் தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

துபையில், ரமலான் மாதத் தொடக்கத்தில் 127 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11.66 லட்சத்துக்கும் (50,000 திர்ஹாம்) அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT