டெக்சாஸ்-மெக்சிகோ: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி!
நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவின் எல்லைப்பகுதியில் கடும் புயல் காரணமாக பெய்த மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கினர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் 31 செ.மீ.வரை மழை பெய்ததாகக் கூறினர். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 640 இராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
சில பகுதிகளில் 53 செ.மீ.வரை மழை பெய்ததாகவும் கூறுகின்றனர். வெள்ளத்தில் பலரின் வீடுகளும், வாழ்விடங்களும் மூழ்கியதால், நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களைத் தேடி அலைகின்றனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.