சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட நதி நீர் விவகாரத்தில், இதே நிலைப்பாடே தொடரும்... மத்திய அரசு திட்டவட்டம்!
புது தில்லி: பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிவித்த நடவடிக்கைகள் அனைத்தும் நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், சிந்து நதி நீர் உடன்பாடு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் செல்வது தொடர்ந்து தடைபட்டுள்ளது.
Advertisement
Advertisement