கோப்புப்படம் 
உலகம்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமைபெற ஆக்கபூா்வமான பங்களிப்பு: சீனா

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும்

DIN

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பின் முதல்முறையாக சீனாவுக்கு மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் திங்கள்கிழமை வந்தடைந்தாா்.

சுற்றுப்பயணத்தின்போது சீன நாட்டு அமைச்சா்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவா் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்தும் விவாதிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளா்கள் சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘சீனா-பாகிஸ்தான் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் துணை பிரதமா் இஷாக் தாரின் வருகை இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் பல்வேறு தருணங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை சீனா தெரிவித்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணவே சீனா விரும்புகிறது. அண்மையில் இரு நாடுகளும் மேற்கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெற ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும்’ என்றாா்.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் சாா்ந்த உதவிகளை சீனா வழங்கியது குறித்தும், சீன தளவாடங்கள் திருப்திகரமாகச் செயலாற்றவில்லை என்று கூறப்படுவது குறித்தும் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நிங் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT