பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!
பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் பெரும் அழிவு: 7,06,000 பேர் பாதிப்பு..
மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய டைபூன் டினோ என்றழைக்கப்படும் கேல்மெகி புயல் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் பாலவான் தீவில் உள்ள எல் நிடோவில் எட்டாவது முறையாகக் கரையைக் கடந்த புயல், மேற்கு பிலிப்பின்ஸ் கடல் அல்லது தென் சீனக் கடலில் தொடர்ந்து நகர்கிறது என்று நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 11 மணி செய்திக்குறிப்பில், பிலிப்பின்ஸ் வானிலை நிறுவனம் டினோ ஐயின் மையம் பாலவானின் கொரோனுக்கு மேற்கே 190 கி.மீ தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மையப்பகுதிக்கு அருகில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவதாகவும், மணிக்கு 180 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி மணிக்கு 20 கிமீ வேகத்தில் காற்று வீசுவதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பாக, மத்திய பிலிப்பின்ஸில் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் முடங்கியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
செபுவில் 49 பேர் உயிரிழந்ததாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சில் மதிப்பிட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் மழை காரணமாக இடிபாடுகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணவில்லை என்றும், நெக்ரோஸ் ஆக்ஸிடென்டலின் லா காஸ்டெல்லாவில் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட மிண்டானாவ் தீவில் நேற்று விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் ஆறு பணியாளர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
இந்தாண்டு நாட்டின் 20வது புயலான டினோ, விசாயாஸின் பெரும்பகுதியையும், மின்டானாவோ மற்றும் தெற்கு லுசோனின் சில பகுதிகளையும் தாக்கி, பரவலான அழிவை ஏற்படுத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் சுமார் 7,06,000 மக்கள் பாதித்துள்ளன. அவர்களில் சுமார் 3,48,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி, பாலவான் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கனமழை, கடுமையான காற்று ஏற்பட வாய்ப்புள்ளது, தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 3 மீட்டருக்கும் அதிகமான அலைகளுக்கு எழக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
At least 66 people have been killed due to Typhoon Kalmaegi, locally known as Typoon Tino which lashed through central Philippines, local media reported on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.