வாடிகனில் போப் 14-ம் லியோவுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு!
போப் பதினான்காம் லியோவை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சந்தித்துள்ளது குறித்து...
வாடிகன் நகரில், போப் பதினான்காம் லியோவை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரசு முறைப் பயணமாக நேற்று (நவ. 5) வாடிகன் நகரத்துக்குச் சென்றடைந்தார். இதையடுத்து, புனித மேரி தேவாலயத்தில் உள்ள மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறையின் மீது மலர் வைத்து அவர் மரியாதைச் செலுத்தினார்.
அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் அப்பாஸ், பாலஸ்தீன மக்களுக்காக போப் பிரான்சிஸ் செய்தவற்றை மறக்க முடியாது எனவும், யாரும் கூறாமலே அவர் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தார் எனவும் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும் வாடிகன் நகரத்தின் தற்போதைய தலைவருமான போப் பதினான்காம் லியோவை, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் முதல்முறையாக இன்று காலை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பில், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மறைந்த போப் பிரான்சிஸ் போலவே கடந்த மே மாதம் பதவியேற்ற போப் பதினான்காம் லியோ, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகின் முதல் டிரில்லியன் டாலர் சம்பளம்! எலான் மஸ்க் கோரிக்கை
Palestinian President Mahmoud Abbas met with Pope Leo XIV in person at the Vatican.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.