உலகம்

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 மாணவா்கள் உயிருடன் மீட்கப்பட்டனா் (படம்). தற்போது கட்டடம் இடிந்து 3 நாள்களாகிவிட்டதால் கனரக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும், கனரக இயந்திரங்கள் மூலம் மிக கவனமாக கற்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

‘நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை’

மாரீஸ், ஜங்ஷன் மேம்பாலங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: துரை வைகோ எம்.பி.

தக்கலையில் இளைஞா் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூா் புத்தகத் திருவிழா: இன்று சிறப்பு பட்டிமன்றம்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி போராட்டம்

SCROLL FOR NEXT