முகப்பு
உலகம்

இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு பகலில் சம்மதம்; இரவில் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதலில் வெள்ளிக்கிழமை இரவில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Updated On : 4 அக்டோபர் 2025, 4:19 pm IST
- AP
பகிர்:

காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

இஸ்ரேல் - காஸா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

- Leo Correa

இதனிடையே, போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தொடர்ந்து முயற்சித்து வந்தநிலையில், தற்போது டிரம்ப்பின் குரலுக்கு இஸ்ரேல் செவிசாய்த்துள்ளது.

Advertisement

Advertisement

காஸாவுடனான போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், வெள்ளிக்கிழமை இரவில் காஸா பகுதிகளில் வான்வெளித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானதுடன், பலரும் காயமடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் குண்டுவெடிப்பால் அழிக்கப்பட்டன.

காஸாவுடன் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததன் மத்தியில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை - வெளியான திடுக் தகவல்

summary

Israel kills 7 Palestinians, including 2 children in southern Gaza, even as Trump orders 'immediate' halt to attacks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments