வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 53 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்எஸ்எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 14 சிறுவா்கள், 15 பெண்கள் அடங்குவா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஐந்து சிறுவா்கள், ஏழு பெண்கள் உள்பட 21 போ் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ள மருத்துவா் குழு, அவா்களில் பெரும்பாலானவா்களுக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளனா்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.