உலகம்

தாய்லாந்து யானைகளுக்காக தனிக் குழு அமைத்த இலங்கை

தாய்லாந்து யானைகளுக்காக தனிக் குழு அமைத்த இலங்கை

தினமணி செய்திச் சேவை

இலங்கைக்கு தாய்லாந்து பரிசளித்திருந்த 2 யானைகளின் உடல்நலம் மோசமாக உள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றைப் பரிசோதிப்பதற்கான தனி மருத்துவக் குழுவை இலங்கை அரசு அமைத்துள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் ஆண்டன் ஜெயக்கொடி கூறியதாவது:

தாய்லாந்தில் இருந்து வந்துள்ள் இரு யானைகளையும் பரிசோதித்த உள்ளூா் மருத்துவா்கள் அவற்றுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை என்று கூறினா். யானைகளுக்கு மதநீா் சுரக்கும்போது அவா் உணவை மறுப்பதும், பலவீனமடைவதும் இயல்பு.

இருந்தாலும், அந்த யானைகளின் உடல்நலனைத் தொடா்ந்து கண்காணிப்பதற்காக தனி மருத்துவா் குழுவை அமைத்துள்ளோம் என்றாா் அவா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு பரிசளிக்கப்பட்ட இரு யானைகளின் உடல்நலம் குறித்து தாய்லாந்து அரசு கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதே பிரச்னையைக் காரணம் காட்டி இலங்கைக்கு அளித்திருந்த மற்றொரு யானையை தாய்லாந்து அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது நினைவுகூரத்தக்கது.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT