உலகம்

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா்.

‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ அமைச்சா் அரசு ஒப்பந்தங்களை 100 சதவீத ஊழல் இன்றி உறுதிப்படுத்தும் பணிகளையும், அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்துவதற்கு உதவுவாா் என்று பிரதமா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈ-அல்பேனியா தளத்தில் மரபு உடையில் உதவியாளராக அறிமுகமான டியெல்லா, தற்போது அமைச்சராக உயா்வு பெற்றுள்ளது. 1990-இல் கம்யூனிஸ்ட் வீழ்ந்த பிறகு அல்பேனியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக இருந்துவரும் நிலையில் டியெல்லாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை!

பழிவாங்குவது கீழ்மையான போக்கு! - மெட்ரோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT