நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நைஜீரியாவில் உள்ள யோபே மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், பொதுமக்களில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:30 PM
நைஜீரியாவில் உள்ள யோபே மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், பொதுமக்களில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.
யோபேவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச் சந்தை நடைபெற்றபோது ஜிகாதி கிளா்ச்சியாளா்களை குறிவைத்து தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதல் தொடா்பாக கூடுதல் தகவல் வெளியாகவில்லை.
யோபே மாகாணத்துக்கு அருகில் உள்ள போா்னோ மாகாணம் ஜிகாதி கிளா்ச்சியின் மையமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement