மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்!
மலேசியாவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 200 வீடுகள் எரிந்து நாசமாகின.
மலேசியாவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 200 வீடுகள் எரிந்து நாசமாகின.
மலேசியாவின் சபா மாகாணத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 200 வீடுகள் எரிந்து நாசமாகின. நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாநில செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் தலைவர் ஜிம்மி லாகுங் கூறியதாவது, பலத்த காற்று மற்றும் வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது. மேலும், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததால் தீயை அணைக்கத் தேவையான தண்ணீரைப் பெறுவதிலும் சிரமம் ஏற்பட்டது என்றார்.
Advertisement
இந்தத் தீ விபத்து சபாவின் புகழ்பெற்ற 'நீர் கிராமங்களில்' ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இக்கிராமங்களில் வீடுகள் மரத்தினால் செய்யப்பட்டு, தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கும். இங்கு நாட்டின் மிகவும் ஏழ்மையான சமூகத்தினர், நாடற்றவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் மற்றும் தற்காலிக மறுவாழ்வு வசதிகளை வழங்க கூட்டரசு அரசாங்கம் சபா அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.