கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து!
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது பற்றி...
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து அலுவலகங்களில் தீ பற்றியுள்ளது. அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் தீ பற்றியதன் காரணமாக, அங்கிருந்த ஆம்னி பேருந்து அலுவலகங்கள், கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.
summary