குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
குஜராத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...
குஜராத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரூச் மாவட்டத்தின் ஜகாடியாவில் உள்ள குஜராத் தொழிற்சாலை மேம்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் வியாழக்கிழமை (ஏப். 23) மதியம் 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தீயணைக்கும் நடவடிக்கைகளுக்காக அங்கலேஷ்வர் பகுதியில் இருந்தும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு களமிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.