தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
தெற்கு லெபனானில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் வாழும் டெபெல் கிராமத்தில், இஸ்ரேல் ராணுவ வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் வெளியாகி, கண்டனம் வலுத்துள்ளது.
தெற்கு லெபனானில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் வாழும் டெபெல் கிராமத்தில், இஸ்ரேல் ராணுவ வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் வெளியாகி, கண்டனம் வலுத்துள்ளது.
இச்சம்பவத்தை அமெரிக்கா, கிறிஸ்தவ மத அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ‘இச்செயல் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான அவமதிப்பு மட்டுமல்லாமல், அடிப்படை மனித விழுமியங்கள் மீதான மரியாதையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது’ என கத்தோலிக்க திருச்சபை சாடியுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவத்துக்கு வருத்தம் கூறிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இது யூதா்களின் பண்புக்கு எதிரானது; அந்த வீரா் கண்டிப்பாக தண்டிக்கப்படுவாா்’ என உறுதியளித்தாா்.
Advertisement
இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும், சேதப்படுத்தப்பட்ட சிலுவையை மீண்டும் சீரமைக்க உதவுவோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.