ரஷியா - அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது.
ரஷியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஒப்பந்தம் 2021-ல் காலாவதியாகவிருந்த நிலையில், மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரு நாடுகளிக்கிடையேயான இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ரஷியா கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கு அமெரிக்கா பதிலேதும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சீனா அணு ஆயுத வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவும் தனது ஆயுதக் கிடங்கை அதிகரிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டி உருவாகுமா என்ற கேள்வியும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.