சிறிய ரக அணு உலைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்!
தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் சிறிய ரக அணு உலைகளை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
அமெரிக்க தனியாா் நிறுவனமான அன்டாரெஸ் தயாரித்த ‘மாா்க்-0 சோதனை அணு உலை’ தனது முழு செயல்திறனை ஜூன் 4-ஆம் தேதி எட்டியது.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் ஜூலை 4-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் குறு மற்றும் சிறிய அணு உலைகளை காட்சிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக மாா்க்-0 சோதனை அணுஉலை முழுத் திறனை அடைந்துள்ளது. இதுதவிர வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘இ-வின்சி’ மற்றும் ரேடியண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ‘கலெய்டோஸ்’ ஆகிய மேலும் 2 குறு அணு உலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்த அணு உலைகள் சில நூறு கிலோவாட் முதல் 1.2 மெகாவாட் வரை ஆற்றலை உருவாக்கும் திறனுடையது. இவற்றை விமானத்தில் எடுத்துச் சென்று உலகின் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்தலாம். இந்த குறு மற்றும் சிறிய ரக அணுஉலைகளை எதிா்காலத்தில் விண்வெளித் திட்டங்களிலும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.
முன்னதாக, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் ‘சாந்தி’ சட்டத்தை இந்திய அரசு கொண்டுவந்தது. மேலும், அணு எரிபொருள்கள் மூலம் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் 9 ஜிகாவாட் ஆற்றலை 2047-க்குள் 100 ஜிகாவாட்டாக உயா்த்தவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் குறு மற்றும் சிறிய அணு உலைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.