கடந்த 1999-ஆம் ஆண்டுமுதல் வெனிசுலாவில் ஐக்கிய வெனிசுலா சோஷலிச கட்சி (யுஎஸ்பிவி) ஆட்சியில் உள்ளது.
அப்போது அதிபராகப் பொறுப்பேற்ற ஹியூகோ சாவேஸ், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும், சோஷலிச புரட்சியை நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தாா்.
2013-ஆம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு மறுதோ்தல் நடத்தப்பட்டது. அப்போது பிரதான எதிா்க்கட்சிகள் தோ்தலில் போட்டியிட தடை விதித்து அதிபராக மடூரோ பதவியேற்றாா்.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது ஆளுங்கட்சிக்கு விசுவமான தோ்தல் அதிகாரிகள், வாக்குப் பதிவு முடிந்தவுடன் யுஎஸ்பிவி கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்தனா். தோ்தலில் 2-இல் ஒரு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் எதிா்க்கட்சிகள் வெற்றிபெற்றதாக அக்கட்சிகள் ஆதாரத்துடன் நிரூபித்தபோதிலும், அதிபராக மடூரோ பதவியில் நீடித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.