முகப்பு
உலகம்

ஈரான் போர்: அமெரிக்காவின் 3 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்..!

அமெரிக்க போர் விமானங்களைச் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது

Updated On : 2 மார்ச், 2026 at 5:30 PM
எஃப் - 15 போர் விமானங்கள் - கோப்புப்படம் | IANS
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 5:03 PM

அமெரிக்க போர் விமானங்களைச் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 5:18 PM

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவின் தோழமை நாடான குவைத்தின் வான் பரப்பில் அமெரிக்காவின் எஃப் - 15 போர் விமானங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த விமானங்களை எதிரி நாட்டு ஊடுருவல் எனத் தவறுதலாக நினைத்து குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு திங்கள்கிழமை (மார்ச் 2) சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்க ராணுவத்தால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப்படையின் எஃப் - 15 போர் விமானங்களில் இருந்த வீரர்கள் குழு பாராசூட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் பத்திரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

summary

US jets mistakenly shot down by Kuwait

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.