முகப்பு
உலகம்

ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்வு

Updated On : 19 மார்ச் 2026, 8:50 am IST
பிளாஸ்டிக் பாட்டில் - பிரதிப் படம்
பகிர்:

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்​பட்​ட 200 மி.லி. குடிநீர் பாட்​டில் இன்று ரூ. 10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்​டில் ரூ. 12-க்​கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்​கும், ரூ. 20-க்கு விற்கப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ. 25-க்​கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்​டர் பாட்​டில் ரூ. 35-க்​கும், ரூ. 50-க்கு விற்​கப்பட்ட 5 லிட்​டர் பாட்​டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், மீண்டும் பயன்​படுத்​தக்கூடிய கேன்​களில் அடைக்​கப்பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்​கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொது​வாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருள்​கள் மூலமாகவே பிளாஸ்​டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஈரான் போர் காரணமாக, பாலி எத்​திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்​ததையடுத்​து, பிளாஸ்​டிக் பொருளி​கள் விலையும் அதி​கரித்​துள்​ளது.

summary

Plastic packaging costs surge due to Iran war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments