முகப்பு
உலகம்

ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்வு

Updated On : 19 மார்ச், 2026 at 3:20 AM
பிளாஸ்டிக் பாட்டில்
பகிர்:

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்​பட்​ட 200 மி.லி. குடிநீர் பாட்​டில் இன்று ரூ. 10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்​டில் ரூ. 12-க்​கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்​கும், ரூ. 20-க்கு விற்கப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ. 25-க்​கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்​டர் பாட்​டில் ரூ. 35-க்​கும், ரூ. 50-க்கு விற்​கப்பட்ட 5 லிட்​டர் பாட்​டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

மேலும், மீண்டும் பயன்​படுத்​தக்கூடிய கேன்​களில் அடைக்​கப்பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்​கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொது​வாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருள்​கள் மூலமாகவே பிளாஸ்​டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஈரான் போர் காரணமாக, பாலி எத்​திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்​ததையடுத்​து, பிளாஸ்​டிக் பொருளி​கள் விலையும் அதி​கரித்​துள்​ளது.

summary

Plastic packaging costs surge due to Iran war

முழு கட்டுரையைப் படிக்க →