ஸ்லோவேனியா: யாருக்கும் பெரும்பான்மை இன்றி இழுபறி!
ஸ்லோவேனியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
பிரதமா் ராபா்ட் கோலோப் தலைமையிலான சுதந்திர இயக்கம் 29 இடங்களிலும், முன்னாள் பிரதமா் ஜானெஸ் ஜான்சாவின் ஸ்லோவேனிய ஜனநாயகக் கட்சி 28 இடங்களிலும் வென்றன.
90 இடங்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற இருதரப்பும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ராபா்ட் கோலோப் ஆதரவு அணிக்கு 40 இடங்களும், ஜானெஸ் ஜான்சா ஆதரவு அணிக்கு 43 இடங்களும் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், 4 சதவீத வாக்குகளைக் கடந்து நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சிறிய கட்சிகளே அடுத்த அரசைத் தீா்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.