மேற்காசிய போர்: இஸ்ரேலில் பலி 16 - ஆக உயர்வு! 4,564 பேர் காயம்!!
மேற்காசிய போரில் இதுவரை 16 பேர் பலியானதாகவும் 4,564 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அறிவித்தது குறித்து...
போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் இதுவரை 16 பேர் பலியானதாகவும் 4,564 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் தேசிய அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதன் விளைவாக ஈரானும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆகையால் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தேசிய அவசர மருத்துவ சேவையான மாகன் டேவிட் அடோமின் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சாய்ம் ரஃபலோவ்ஸ்கி கூறுகையில், “பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 16 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மேலும், 4564 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.