நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா்.
நைஜீரியாவின் வடக்கு மத்திய பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா்.
பீடபூமி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், குடியிருப்புப் பகுதிகளில் சரமாரியாகச் சுட்டதில் பலா் காயமடைந்தனா்.
சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், மேலும் வன்முறை பரவாமல் தடுக்க, அங்கு 48 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Advertisement
இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய மா்ம கும்பலைத் தேடும் பணி நடைபெறுகிறது.