பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!
பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறு வன்முறையாக மாறியதில் 7 பேர் கொல்லப்பட்டது குறித்து...
வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12) தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நௌஷேரா மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
“மரம் வெட்டுதல் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியதில் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நௌஷேரா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
Seven people were killed in Pakistan after a dispute over tree-cutting turned violent.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.