திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வைகோ தயாரிக்கும்‘வேலு நாச்சியார்’ படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா?

உலகில் முதல் பெண்கள் படைப் பிரிவு மற்றும் தற்கொலை படைப் பிரிவையும் உருவாக்கிய வீரப் பெண்மணி வேலு நாச்சியார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 6:09 pm IST

உலகில் முதல் பெண்கள் படைப் பிரிவு மற்றும் தற்கொலை படைப் பிரிவையும் உருவாக்கிய வீரப் பெண்மணி வேலு நாச்சியார். சிவகங்கை சீமையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த மங்கை. சிவகங்கையின் அரசியான வேலு நாச்சியார் வெள்ளித் திரையை ஆட்சி செய்யப் போகிறாள். ஸ்ரீராம் ஷர்மாவின் இயக்கத்தில் வேலு நாச்சியார் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

Story image

வேலு நாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவள்ளுவரின் உருவப் படத்தை வரைந்த பிரபல ஓவியர் வேணுகோபால் ஷர்மாவின் மகன் ஆவார். சமீபத்தில் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் சென்னையில் நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, இந்த நாடகம் விரைவில் சினிமாவாகும், அதை நான் தயாரிக்கிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இளையராஜாவை சந்தித்து இப்படத்தைப் பற்றி கூறவும், தமிழக வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கைப் படத்துக்கு இசையமைக்க ராஜா இசைந்தார். ஆனால் இளையராஜா தரப்பிலிருந்து இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை. 

இதற்காக 'கண்ணகி பிலிம்ஸ்' என்கிற பெயரில் புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் வைகோ. இதன் பொருட்டு சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று, அந்தச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறார் வைகோ.

இப்படத்துக்கான திரைக்கதையை வைகோ எழுதுகிறார். அது குறித்து அவர் கூறும் போது, ‘வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன். இந்த நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மாவே இந்த படத்தையும் இயக்குகிறார்’என்றார் வைகோ.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.