ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சீதக்காதி படத்தில் முதல் 40 நிமிடங்கள் மட்டுமே வருவேன்: விடியோவில் விஜய் சேதுபதி விளக்கம்

ஏன் இந்தப் படத்தை 25-வது படமாகச் சொல்லவேண்டும், என்னுடைய படமாகச் சொல்லவேண்டும்?

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து சீதக்காதி படம் டிசம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது. 

விஜய் சேதுபதியின் 25-வது படமான இந்தப் படம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அதில் அவர் கூறியதாவது:

பொதுவாக ஒரு கலைஞனுக்கு ஏற்படுகிற எண்ணத்தை கலையின் மூலமாக வெளிப்படுத்துவான் என்று சொல்வார்கள். இயக்குநர் பாலாஜி தரணிதரனின் கலைக்கான நன்றிக்கடன் தான் சீதக்காதி. இப்படிப்பட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த பாலாஜி தரணிதரனுக்கு நன்றி.

இந்தப் படத்தில் படம் தொடங்கி முதல் 40 நிமிடங்களில்தான் நான் வருவேன். அப்புறம் ஏன் இந்தப் படத்தை 25-வது படமாகச் சொல்லவேண்டும், என்னுடைய படமாகச் சொல்லவேண்டும்? இந்தப் படம் நான் ஏற்று நடித்துள்ள ஐயா என்கிற கதாபாத்திரத்தின் ஆன்மா, கலையைப் பற்றிய படம். திரையரங்கில் பார்க்கும் உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைத்த கலைக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.