இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட ‘கசட தபற’

ஓடிடி தளத்தில் வெளியான கசட தபற திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் உடனான சிக்கல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

News image
ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட ‘கசட தபற’
Updated On :27 ஆகஸ்ட் 2021, 9:53 am

DIN

ஓடிடி தளத்தில் வெளியான கசட தபற திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் உடனான சிக்கல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

வைகைப் புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதனைத் தொடர்ந்து இவர் அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கினார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ஷாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, பிரேம்ஜி அமரன் போன்றோர் நடித்த கசட தபற என்கிற படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். 6 கதைக்களங்கள் கொண்ட இந்தத் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி, சீன் ரோல்டன் என ஆறு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளனர்.

அதேபோல ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்களும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். ஆறு கதைகள் கொண்ட படமாக கசடதபற உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தயாரிப்பு நிறுவனம் ஏசிஎஸ் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை தராமல் இருந்ததாகக் கூறி அந்நிறுவனத்தினர் உயர்நீதிமன்றத்தில் கசட தபற திரைப்படத்திற்கு எதிராக தடை வாங்கியுள்ளனர். இதன்காரணமாக இன்று சோனி ஓடிடி தளத்தில் வெளியான கசட தபற திரைப்படம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது. எனினும் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.