மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திலிருந்து கார்த்திக் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய உச்சந்தல ரேகையில என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தையும் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக டி.முருகானந்தம் இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.