பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் ஸ்வரா சாகருக்கும் பாடகி சஞ்சனாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தமிழில் நரசிம்மா, ஷாஜகான், யூத், திருப்பாச்சி, மலைக்கோட்டை, படிக்காதவன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் மணி சர்மா. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில் இவரது மகன் ஸ்வரா சாகர் மஹதிக்கும் பாடகர் சஞ்சனாவிற்கும் நேற்று (அக்டோபர் 12) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. ஸ்வரா சாகரும் தெலுங்கில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாடகி சஞ்சனாவும் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களில் பாடல்களைப் பாடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










