ரஜினியின் ஜெயிலர் படமும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் நடித்து வரும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் படமும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாம். இதனால் பாக்ஸ் ஆபிசில் எந்த படம் அதிகம் வசூலிக்கும் என்ற போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிக்பாஸில் ஆயிஷாவைப் பாராட்டிய கமல்
நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குநர் ஷங்கரும் இணைந்து சிவாஜி, எந்திரன், 2.0 என மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கிவருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். இசையமைப்பாளர் தமனை பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராகவும், தான் தயாரித்த ஈரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.