பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கில் விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகா் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இப்படத்தின் கதை 2016-ல் தங்கள் தயாரிப்பில் வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்திலிருந்து திருடப்பட்டதாக ராஜகணபதி என்பவர் தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: விலகிய விஜய் சேதுபதி.. முத்தையா முரளிதரனாக ஆஸ்கர் பட நடிகர்!
இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் ‘ ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்ததால் நஷ்டத்தில் உள்ளேன். இதனால், கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். திட்டமிட்டே இப்படத்திற்கு எதிராக தடை வழக்குகள் போடப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.