தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அஜித்குமார் 62: புதிய இயக்குநர் யார்? 

அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2023, 2:04 pm IST

அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதனை விக்னேஷ் சிவனும் உறுதி செய்திருந்தார். மேலும் படத்திற்கான முதற்கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. 

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மும்பையில் தொடங்கும் எனவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் 62ஆவது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. படத்தின் கதை தொடர்பான விவகாரத்தில் விக்னேஷ் சிவனுக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே எழுந்த பிரச்னையே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

அதேசமயம் அஜித் படத்தை விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. மகிழ்திருமேனி இதற்குமுன் ‘தடையறத்தாக்க’ ‘தடம்’ ‘மீகாமன்’ ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.