சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'அன்பே வா' சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அன்பே பே சீரியல் நவம்பர் 2020 முதல், 783 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை பிரின்ஸ் இம்மானுவேல் மற்றும் பி.செல்வம் எழுதி இயக்கியுள்ளனர். இத்தொடருக்கு கிரண் இசையமைத்துள்ளார்.
அன்பே வா தொடரில் டெல்னா டேவிஸ் மற்றும் விராத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் அருண் குமார் ராஜன், ரோவன், சுவாதி தாரா, பூஜா ஃபியா, ஜே.துரை ராஜ், பாண்டி கமல், கன்யா பாரதி, சுஜாதா செல்வராஜ், ஆனந்த், வி.ஜே.தனுசேக், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்தொடரில் வில்லியாக நடித்துவரும் மகாலட்சுமிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பூமிகா கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பே வா தொடரின் சிறப்பு கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.