
நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’காதலன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதன்பின் பாட்சா, வில்லாதி வில்லன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
பின், நடிப்பில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதையும் படிக்க: ’1500 படங்களுக்கு இசையமைத்த பின் இதைச் சொல்கிறேன்..’: இளையராஜா
இந்நிலையில், சமீபத்தில் அவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததுள்ளது. அந்த லிங்க்கை திறந்தவுடன் நக்மாவை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு வங்கிக்கணக்கு விவரங்களைப் கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட நக்மா அத்தகவல்களை கொடுக்க மறுத்திருக்கிறார்.
இருப்பினும், சில நிமிடங்களில் அவர் கணக்கிலிருந்து ரூ.99,998 எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த நக்மா மும்பை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, நடிகை ஸ்வேதா மேனனிடமும் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.