நான் செய்யும் தொழில் மேல் சத்தியமாக தமிழர்களை நான் இழிவாக பேசவில்லை என்று நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை தன்யா பாலகிருஷணன் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்யாவின் முகநூல் பக்கத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதாக தற்போது அவர்மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கைவொன்றை தன்யா வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன். அதையே இப்பொழுதும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. அந்தக் கருத்து நான் கூறியதே அல்ல.
நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழில் தான். அதற்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன். இந்த சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது.
அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிக்க: அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் ‘போர்’: ரிலீஸ் தேதி!
நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு....." என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விளையாட்டின்போது மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!
நெல்சன், ரஞ்சித், மிஷ்கின்..! தமிழ் இயக்குநர்களுக்கு மட்டும் டிசி சிறப்புக் காட்சி!

100 நாள் வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம்! - பிரேமலதா | TVK | DMDK
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



