நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அவதூறு விடியோக்களை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வேன்: ஏ. ஆர். ரஹ்மான்

அவதூறு கருத்துகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் எச்சரிக்கை...

News image

ஏ. ஆர். ரஹ்மான்

Updated On :23 நவம்பர் 2024, 7:10 pm IST

தன் விவாகரத்து குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏ. ஆர். ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக தனித்தனியாக அறிவித்ததும், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியானது.

சினிமாத் துறையில் இருந்தாலும் பலரிடம் மேன்மையானவர் என்கிற பெயரைப் பெற்ற ரஹ்மானுக்கு விவாகரத்து என செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் இருக்கின்றனர்.

சாய்ரா பானு பொதுவெளியில் அதிகம் தெரியாவிட்டாலும் சில நிகழ்வுகளில் ரஹ்மானுடன் இணைந்து மேடையேறியிருக்கிறார். இருவரின் பேச்சும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன.

இச்சூழலில், இவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து சமூக வலைதளங்களில் தேவையற்ற ஆதாரமில்லாத கருத்துகளும் பரவி வருகின்றன.

முக்கியமாக, ரஹ்மான் விவாகரத்து அறிவித்த நாளிலேயே அவரின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞரும் தன் விவாகரத்தை அறிவித்தது சில சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நிலையில், ரஹ்மான் தரப்பிலிருந்து சட்ட ரீதியான நோட்டீஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்ட கட்டுரைகள், விடியோக்களை வெளியிட்டவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு தொடர்வேன். யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதளங்களும் இது பொருந்தும்.” என தெரிவித்துள்ளார்.

இதனால், ஆதாரமற்ற விடியோக்களை வெளியிட்டவர்கள் அதனை நீக்கத் துவங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.