மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

எனக்கு ஒன்றும் இல்லை... நன்றாக இருக்கிறேன்: விஷால்

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து...

News image
Updated On :12 ஜனவரி 2025, 12:27 pm IST

நடிகர் விஷால் தன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.

ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.

தற்போது, இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகியுள்ளது.

சில நாள்களுக்கு முன், படத்தின் புரமோஷன் நிகழ்வில் சுந்தர். சி, விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் விஷால் பேசும்போது, அவரால் சரியாக ஒலிவாங்கியை (மைக்) பிடிக்க முடியாத அளவிற்கு கை நடுங்கிக்கொண்டே இருந்தது.

மேலும், பேசும்போதும் அமர்ந்திருந்தபோதும் விஷால் கண்ணீர் விட்டபடி இருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று (ஜன. 11) மத கஜ ராஜா சிறப்புத் திரையிடலின்போது நிகழ்வில் பேசிய விஷால், “இந்த வெளியீட்டிற்காக நானும் சுந்தர் சியும் 12 ஆண்டுகள் காத்திருந்தோம். புரமோஷன் நிகழ்வில் பேசியபோது என் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அன்று எவ்வளவு பேர் என்னை நேசிக்கின்றனர், ஆதரவு கொடுக்கின்றனர் என தெரிந்துகொண்டேன்.

விஷால் நன்றாக இருக்கிறாரா? சரியாகி விட்டாரா? என பலரும் கேட்கின்றனர். 20 ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இதுதான். நான் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதியாகவில்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். நான் விழுவேன் என நினைக்க வேண்டாம். என் தன்னம்பிக்கைதான் என் பலம். உங்கள் அன்பை எப்போதும் மறக்கமாட்டேன்.” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.