பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா டிரைலர்!

சர்ச்சையை ஏற்படுத்திய சுரேஷ் கோபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Published On :

தணிக்கை வாரியத்தால் சர்ச்சையைச் சந்தித்த ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்துக்கு, “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” (Janaki vs State Of Kerala) எனப் பெயரிடப்பட்டிருந்தது.

இதில், ஜானகி என்பது சீதையின் மறுபெயர் எனக் கூறி அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த 2 வாரங்களில் 4 முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

அதனால், படத்திற்கு ”ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” எனப் பெயர் மாற்றப்பட்டு வருகிற ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். வழக்குரைஞராக சுரேஷ் கோபியும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.

Summary

actor suresh gopi and anupama parameswaran starring janaki v vs state of kerala movie trailer out.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.