கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கலசலிங்கம் பல்கலை: பிளஸ் 2வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு 100 % இலவச கல்வி

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அவர்கள் விரும்பும் பாடத்தில் சேரலாம்.

News image
Updated On :11 டிசம்பர் 2012, 6:55 am

கோ.ஜெயக்குமார்

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவிகளுக்கும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுடன் 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்படும் என வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில், தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஆலோசனை வழங்குவதற்கான ஜெயிப்பது எப்படி? நிகழ்ச்சி தேனியில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக டீன் டாக்டர் சரவணசங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி வேந்தர் க.ஸ்ரீதரன் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் பிளஸ் 2 பாடங்களில் அனுபவம்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் எவ்வாறு அதிகம் மதிப்பெண்கள் பெறலாம் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில நல்லாசிரியர் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதயகுமார், இளங்கோவன், ரஜினி, கார்த்திக், சிதம்பரம், அருண், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் டாக்டர் சு.கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.