கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2016, 8:56 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தலைமையில் மாணவ மாணவியர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் குழந்தைகள் தாங்கள் வாங்கி வந்த மெழுகுவர்த்தியை ஏந்தி அவருக்கு அஞ்சலி செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.வறுமையிலிருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் என்று நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள் அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி மாணவ மாணவியருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.